சென்னை மாவட்டத்தில் கஞ்சா கேக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒடிசா, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதனை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் கடையில் சோதனை செய்து கூரியர் பார்சலை கைப்பற்றினர். அதில் 200 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் இருந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கூரியர் பார்சலில் கஞ்சாவை கடத்தி வந்த ஏக்நாத் என்பவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா கேக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.