சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் லோக்நாத்(17) திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லோக்நாத் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கால்பந்தாட்ட வீரரான லோக்நாத் ஆங்காங்கே எகிறி குதித்து விளையாடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை லோக்நாத் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருக்கும் கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.