ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல்வேலன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு-மேட்டூர் சாலையில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், கம்ப்யூட்டர், ஏசி உள்ளிட்டவை எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.