திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் வசிக்கும் ஜான் பீட்டர், எட்வின் என்பது தெரியவந்தது.

இருவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜான் பீட்டர் மற்றும் எட்வின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.