திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குள்ளனம்பட்டியில் தொழிலதிபரான அரவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் அரவிந்தராஜ் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் அரவிந்தராஜ் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.