திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சரவணகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த சரவணகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகதீசனையும், ஆறுமுகத்தையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.