தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையை தடுக்காத சேத்துப்பட்டு, தானிப்பாடி மற்றும் செங்கம் காவல் நிலையங்களை சேர்ந்த 5 போலீசார் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த உத்தரவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.