கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி வனிதா அவர்கள் கூறியபடி தர்மபுரி உழவர் சந்தை எதிரே இருக்கும் அரசு போக்குவரத்து கழக டெம்போ முன்பு பணத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு கார்களில் வந்த 7 பேர் வனிதாவிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து கார்களில் ஏறி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.