தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி பகுதியில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வேடியப்பனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேடியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.