தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை பெற்றோருக்கு தெரியாமல் கார்த்திக் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். தனது மகள் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து இளம்பெண்ணின் பெற்றோர் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு தனது பெற்றோர் அழுததை கண்டு மனம் உருகிய இளம்பெண் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.