தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமங்கலி பிரியாவும், சித்தரலேகாவும் குமரவேலிடமிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.

ஆனால் கூறியபடி அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து குமரவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.