கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.