கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒப்பந்தல் கண்ணுபொத்தை பகுதியில் சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அஜித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.