தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினார்.

அப்போது சந்திரசேகரன் என்பவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது உறுதியானது. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர்.