தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன், அருள், பாஸ்கர், அணில் குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.