தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10, 11, 12, 13-ஆவது வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மே ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தனர். அந்த மனுக்கள் உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த முகாமில் கவுன்சிலர்கள் புண்ணியமூர்த்தி, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.