தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் பாண்டவர்மங்கலத்தில் இன்னாசி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இன்னாசிமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனையடுத்து இன்னாசி முத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இன்னாசி முத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்னாசி முத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.