திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் ஷர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா தங்களது வீட்டில் இருக்கும் செட்டில் கார், இருசக்கர வாகனம், தனது அண்ணனின் வாகனங்கள், விற்பனைக்காக வைத்திருந்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் வாகனங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு கார்கள், ஒரு டிராக்டர், 7 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.