காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை பொது செயலாளர் மகேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

35 மாதங்களாக தாமதமாகி வரும் ஊதிய உயர்வு தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும், எல்லா கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும் உழிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.