வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது கடந்த 2021-ஆம் ஆண்டு நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அஜித் குமார் சுகுமாரை கட்டையால் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.