கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி, பாண்டியன்குப்பம் ஆகிய கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் பாண்டியர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.