ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி பார்த்தனர்.

ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.