கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.