சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில், தோட்டங்களில் உள்ள ஆடுகளை வெறிநாய்கள் தாக்கி கொல்லும் அவல நிலை, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களுக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சித்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்குச் சொந்தமான 18 ஆடுகளை, வெறிநாய்கள் நள்ளிரவில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்து, கடித்து குதற எட்டு ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலையே உயிரிழந்தன, மற்றவை பலத்த காயங்களுக்கு உள்ளாகின.

பதற்றமான சத்தம் கேட்டதும், பழனியம்மாளின் குடும்பத்தினர் இந்த பயங்கரமான காட்சியை கண்டு அதிர்ந்து, உடனடியாக வருவாய் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, இறந்த ஆடுகளின் சடலங்களை அகற்றி, காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.