திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என பொய்யாக கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் பொய்யாக பல குறைகள் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக ரூ.1,00,000 அபராதம் விதித்து அதை தரும்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். உணவக உரிமையாளர் வெங்கடேஷ், சந்தேகமடைந்து, திருச்சி எஸ்பி ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு, போலி அதிகாரி குறித்து தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் போலி அதிகாரியை கைது செய்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில்,

அவர் திருவெறும்பூர் பகுதியை  சேர்ந்த இயந்திரப் பொறியாளர் முருகன் என தெரியவந்தது. பின் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இவர், 2018-ஆம் ஆண்டு கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும்,அவர் மீது கோவை, நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயுதங்கள் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும்  தெரியவந்தது.

அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்ததாக முருகன் மீது மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து தற்போது அவரை சிறையில் அடைத்தனர்.