திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய தாயிடம் பால் குடிக்காமல் பசிவிடம் சென்று பால் அருந்தி உள்ளது.

இந்த ஆச்சரியமான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் இதில் பசுவும் ஆட்டுக்குட்டிக்கு நன்றாகவே ஆதரவு கொடுத்துள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.