ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, இந்த நிகழ்ச்சிக்கு பாண்டே வரிங்களான்னு  கேட்டேன்…  ஆமா அண்ணேன்…  நான் கண்டிப்பா வாரேன்னு சொன்னாரு. அதுமட்டும் இல்ல..  அவர் இங்கே என்ன பேசுவரோ, அதை என்கிட்ட பேசுறத கருத்தா சொல்லுறேன். அண்ணன் ஓபிஎஸ்  அவர்கள் தமிழக அரசியலில் ஒரு அசைக்க முடியாத ஒரு சக்தி. அதை யாரும் மறுக்க முடியாது என்பது தான் ரங்கராஜ் பாண்டேயோட கருத்து.

அந்த கருத்தை பலமுறை என்கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அவர் இங்க வந்து பேசுவார் என்று எதிர் பாத்தேன். ஆனால்  சூழ்நிலை காரணமாக இங்க வரமுடியல. மருது அழகுராஜ் என்னுடைய இனிய நண்பர். மிகுந்த பாசத்துக்குரிய ஒரு சகோதரர்.மேலும் இங்கே பேசியவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் தொண்டராக செயல்பட்டது, அனுபவங்கள் உங்களிடம் திரும்பச் சிறப்பாக பேசினார். நானும் அதை கூர்ந்து கவனிச்சேன். உண்மையிலே அவர் இந்த இயக்கத்தோட ஊனோடு கலந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை.

இன்றைக்கு அரசியல் களம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை நோக்கி போயிட்டு இருக்குது. 2024ன் இந்த அரசியல் களம் தான் 2026யை முடிவு செய்யும். அந்த வகையில் இன்னைக்கு ஓபிஎஸ் அவர்கள், 2024இல் இன்னைக்கு உள்ள அரசியல் களத்தில ஒரு மிகப்பெரிய சக்தியாக தமிழ் மண்ணில் இருந்துட்டு இருக்காரு என தெரிவித்தார்.