கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று கோவிந்தராஜும், தாமரையும் ரங்கசாமியின் வீட்டு கதவை தட்டினர். அப்போது கதவை திறந்து வெளியே வந்த ரங்கசாமியிடம் இரவு நேரத்தில் எதற்காக எங்கள் வீட்டு கூரையை தட்டி விட்டு சென்றாய் என இருவரும் கேட்டுள்ளனர்.

இதனால் ரங்கசாமிக்கும், கோவிந்தராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கோவிந்தராஜும், தாமரையும் இணைந்து மரக்கட்டையால் ரங்கசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரங்கசாமியை சித்ரா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரங்கசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோவிந்தராஜ், தாமரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.