கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.