தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு ஐவேந்திரனின் பெற்றோருடன்  புதுமணத் தம்பதியினரை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.