சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளியான அருள்குமார் என்பவர் மது குடிக்க சுதாகரிடம் பணம் கேட்டார். அதற்கு சுதாகர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அருள்குமார் பீர் பாட்டிலால் சுதாகரின் தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த சுதாகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.