சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணி என்ற மனைவியும் சதீஷ் (30), சுபாஷ் (29) என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று மதியம் கண்ணன் ராஜீவ் நகரில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுபாஷ் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று 3 நாட்கள் தான் ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.