4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் டிசம்பர் 4ம் தேதி திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், சென்னை மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வருகிற ஐந்தாம் தேதி கரையை கடப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.