பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வி அதிகாரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் காலாண்டு தேர்வில் 10% அரசு பள்ளிகளே 70 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருந்தது குறித்து கூறப்பட்டது.

மேலும் 50% பள்ளிகளின் காலாண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. இதனால் பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் மாநில அளவில் மதுரை பத்தாம் வகுப்பில் 20வது இடத்தில், பன்னிரண்டாம் வகுப்பில் 18வது இடத்தில் இருக்கிறது. இந்த வருடம் மீண்டும் முதல் மூன்று இடங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.