சேலம், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை என அஞ்சப்படுகிறது. மேலும், கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.