திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது..

கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்த காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்து ஓடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பாதிப்புகள், மருத்துவ உதவிகள் கோர whatsapp எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 81 48 53 99 14 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அணைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகன மழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாக கண்காணித்து வருகிறது..

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (social media) மீடியா மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் : 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

வாட்ஸ்அப் எண் : 8148539914

டிவிட்டர் : Username – @tn_rescuerelief, @tnsdma 

facebook id : @tnsdma