திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான  சின்னா, நேற்று இரவு, ஸ்டான்லி மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வண்ணார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னாவின் அகால மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.