விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கண்மாய், வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் இருந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வாகைக்குளம்பட்டியில் முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில்,

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி சங்கியூர் என்ற 80 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்தும்  விழுந்தன. இதையடுத்து மழைநீர் புகுந்ததால் சேதமடைந்த வீடுகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.