திருவள்ளுவர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரண்டு மாதங்களாக பணிக்கு வராமல் பணிக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் ஒரே நாளில் 52 நாட்களுக்கு கையெழுத்து போட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை ஊராட்சியில் செயல் அலுவலராக பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் பேரூராட்சி நிதியில் முறைகேடு செய்வதாகவும் கூறி அண்மையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முறையாக கணக்கு சமர்ப்பிக்கும் வரையில் பேரூராட்சி செயலாளரை அலுவலகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உதவி இயக்குனருக்கு புகார் அளித்தனர். இதனால் பேரூராட்சி செயலாளர்கள் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்ற செயல் அலுவலர் பிரகாஷ் வருகை பதிவேட்டில் 52 நாட்களுக்கான கையெழுத்தை ஒரே நாளில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.