தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொள்ள அல்லி கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(19) என்ற மகன் இருந்துள்ளார். அதே ஊரில் லாரி டிரைவரான சிலம்பரசன்(30) என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஜித், சிலம்பரசன், 17 வயது சிறுவன் ஆகியோர் மோட்டார் சைக்கிள் ராஜாகொள்ள அள்ளி நோக்கி சென்றனர். இந்நிலையில் அதகப்பாடி பகுதியில் சென்ற போது தர்மபுரி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிலம்பரசன், 17 வயது சிறுவன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.