தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது 6 வயது மகன் மதியரசு அந்த பகுதியில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். 2-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த சிறுவனின் கைகள் துணியால் கட்டப்பட்டும், வாயில் துணி திணிக்கப்பட்டும் இருந்தது.

மேலும் கழுத்தில் விரல் நக கீறல்கள் இருந்ததால் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரகாஷ் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, பிரகாசுக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்தது.

பிரகாஷுக்கு ஆறு வயது சிறுவன் மீது மோகம் ஏற்பட்டதால் கடந்த 16-ஆம் தேதி விளையாடுவோம் என கூறி அழைத்து சென்றார். அந்த பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அழைத்துச் சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட பிரகாஷ் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட பிரகாஷிடம் இருந்து சிறுவன் தப்பிக்க முயன்றான். உடனே பிரகாஷ் சிறுவனின் கைகளை கட்டி, வாயில் துணிகளை திணித்து ஓரினச்சேர்க்கையில் கொடூரமாக ஈடுபட்டுள்ளார்.

இதனை சிறுவன் வெளியே சொல்லி விடுவான் என்று நினைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அதன் பிறகு எதுவும் நடக்காதது போல பிரகாஷ் ஊரில் சுற்றி திரிந்தார். பின்னர் போலீசரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பிரகாஷ் சிக்கினார். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, சிறுவன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.