தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலவாடி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான யுவராஜ்(29) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் நோய் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது தந்தையின் சமாதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.