பெங்களூரில் தனியார்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் முன்னாள் பணியாளரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் ஏரோனிக்ஸ்என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று மாலை பாலுடன் புகுந்த முன்னாள் பணியாளர் ஒருவர் தலைமை செயல் அதிகாரி பனீந்திர சுப்ரமண்யா மற்றும் நிர்வாக இயக்குனர் வினு குமார் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலை செய்துவிட்டு முன்னாள் பணியாளர் தப்பி ஓட்டம் பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.