நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மாயார் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப்(26) மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பிரதீப்பும் மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த ரமேஷ் என் மகள் காவியாவும்(26) காதலித்து வந்தனர். கடந்த இரண்டு மாதமாக காவ்யா வாடகைக்கு தங்கி பீளமேட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வருகிற 8-ஆம் தேதி காவியாவிற்கு பிறந்தநாள்.

கடந்த 26-ஆம் தேதி பிரதீப் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை காவியா தனது தாயிடம் பேசுவதற்காக மாடிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அப்போது பிரதீப் சமையலறையில் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிரதீப்பை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.