கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பொன்னன்விளை பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த சத்தம் கேட்டு நடராஜனின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். ஆனால் மரம் விழுந்ததால் ஓட்டு வீடு சேதமானது. எனவே சேதமடைந்த வீட்டிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.