திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார் இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்தினருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு காளியப்பன் அதே பகுதியில் வசிக்கும் கணபதி, கணேசன், கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் இணைந்து பார்வதியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிமன்றம் காளியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், 20,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் கணேசனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும், கணபதிக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீத…