திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அணைத்தலையூரில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேவியர்(4) என்ற மகன் உள்ளார். நேற்று இரவு விளையாட்டுத்தனமாக சேவியர் சில்வர் பாத்திரத்தை தலையில் மாட்டிக் கொண்டான். அதன் பிறகு அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. உடனடியாக சேவியரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு கருவியை பயன்படுத்தி சேவியரின் தலையில் மாட்டிய எவர்சில்வர் பாத்திரத்தை லாவகமாக அகற்றினர். அதன் பிறகே சிறுவனின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.