நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன்படி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இரவு பாடசாலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரவு நேர பாடசாலை திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் திறந்து வைத்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவுகள் அனைத்துமே விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.