விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் காலனியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது ஜீவா குளத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை தீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தீபாவின் தாய் அருணா தனது மகளை கணவர், மாமனார் திருப்பதி, மாமியார் கவிதா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.