விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் சந்திரா சேகரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமல்ராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய கார், வீட்டில் இருந்து ஆணுறைகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சந்திரா சேகரன் மற்றும் அமல்ராணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.